கன்னியாகுமரி: நடிகர் சூர்யாவின் 41 ஆவது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தொடங்கியது. நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகு பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின்னர் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்திருந்தார்.
இந்நிலையில், பிதாமகன் திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா, நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 45 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.