பிரபல மலையாள வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது இளம் நடிகை போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்பாபு நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து மயக்க மருந்து கொடுத்து பல தடவை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்படலாம் என்று பயந்து விஜய்பாபு துபாய் தப்பி சென்று விட்டார்.
நேரில் ஆஜராகுமாறு விஜய் பாபுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்றும் 19-ந்தேதிவரை அவகாசம் வேண்டும் என்றும் விஜய்பாபு காவல்துறைக்கு மெயில் அனுப்பி உள்ளார். இதனை ஏற்காத போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருப்பு பணத்தை விஜய்பாபு மூலம் சினிமாவில் முதலீடு செய்துள்ளனரா என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில் பாலியல் புகாரை வாபஸ் பெறும்படி நடிகைக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.