தமிழகம்

தெலுங்கு மக்களே.. சிறையில் இருந்து வந்ததும் கஸ்தூரியின் முதல் பேச்சு!

ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி என சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

சென்னை: பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டடு. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு மாநிலம் முழுவதும் தெலுங்கு அமைப்புகள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். மேலும், இது தொடர்பாக புகார்களும் அளிக்கப்பட்டன.

குறிப்பாக, தெலுங்கு நாயுடு சம்மேளனம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அப்போது, முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் இருந்த கஸ்தூரியை, தனிப்படை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நவம்பர் 29 வரை நீதிமன்றக் காவல் வழங்கிய நிலையில், புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, ஆட்டிசம் பாதித்த தனது மகனை கவனிக்க வேண்டும் என கஸ்தூரி தரப்பிலும், ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: போட்டுக்கொடுத்த புது அமைச்சர்.. பதறிய பழைய அமைச்சர்.. திமுகவில் நேரடி மோதல்?

இதனையடுத்து கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று மாலை அவர் புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கஸ்தூரி, “அரசியல் வித்தியாசம் பாராமல், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவாக இருந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி” என்றார்.

Hariharasudhan R

Recent Posts

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

49 minutes ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

1 hour ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

2 hours ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

3 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

16 hours ago

This website uses cookies.