திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது
வத்தலகுண்டு பிரபல ஜவுளி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மொய் விருந்தினை தமிழ் திரைப்பட நடிகை அறந்தாங்கி நிஷா மற்றும் அறக்கட்டளை நிர்வாகி அருள்மெர்சி செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
வயநாடு நிவாரணத்திற்காக நடந்த மொய் விருந்தில் வத்தலக்குண்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தி விட்டு தங்களால் முடிந்த பணத்தினை நிவாரணப் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்
விருந்தின் முடிவில் நிவாரண பெட்டியை திறந்தபோது ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் பொது மக்களால் நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தது. மொய் விருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான முகமது அராபத் கூறும்போது நிவாரண பெட்டியில் மட்டும் அல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் நிவாரண பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார் ஜவுளி கடை நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்
மொய் விருந்தின் மூலம் வத்தலகுண்டு பொதுமக்களால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.