தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் புளூ வைரஸ் தொடர்பான நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு கடந்த 2 நாட்களாகவே மிகக் கடுமையான உடல் வலியும், காய்ச்சலும் இருந்து வந்திருக்கிறது. இதற்கான மருந்து மாத்திரைகள் உட்கொண்டும் அவர் உடல் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது குஷ்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.
அவருக்கான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வரும் மருத்துவர்கள் குழு ஓரிரு நாட்களில் குஷ்புவை டிஸ்சார்ஜ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்றும் உங்கள் உடல் ஏதாவது சொன்னால் தயவு செய்து அதை நிராகரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தாம் காய்ச்சலில் இருந்து விரைந்து நலம் பெற்று வருவதாகவும் ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நல்ல மருத்துவர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள குஷ்பு, புளூ காய்ச்சல் மோசமானது என பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் குஷ்பு புளூ வைரஸ் காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அவருக்கு கொரோனா தொற்று கிடையாது என்பது தெளிவாகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.