தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா கடைசியாக ஓடிடியில் வெளியான “O2” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலரும், இயக்குநரான விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9-ம் தேதி கரம் பிடித்தார்.
அதன்பின்பு சற்று இடைவெளி எடுத்துக்கொண்ட நயன்தாரா, தற்போது அட்லீயின் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் லேடி சூப்பர் ஸ்டார் 75வது படம் எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.
நிலேஷ் கிருஷ்ணா எனும் புதுமுக இயக்குனர் நயன்தாராவின் 75வது படத்தை இயக்கிறார். இவர், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார்கள்.
இதில் நடிகை நயன்தாரா செஃப் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.முதன் முதலாக நயன்தாரா இப்படத்தில் செஃப்பாக நடிக்கவுள்ளார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.