தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்திருந்தார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் அவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சார்லி -777 என்ற படத்தைப் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி அந்த படம் நன்றாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வரவேற்ற நிலையில் ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே என்ற பெயர் கொண்ட நபர் ஒருவர் ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்த அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்தார்.
இதனையடுத்து, மர்மநபர் பற்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்ற நடிகை ரம்யா, மா்மநபர் மீது புகார் அளித்தார். அதில், தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் யார் என்று கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.