தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இந்தியா முழுவதும் பேசுபொருளானார். இதனிடையே சமந்தா நடித்த காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனிடையே, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான தனது 4 வருட திருமணத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
சமந்தா விவாகரத்துக்குப் பிறகு நிறைய ட்ரோல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டார், ஆனால் சமந்தா இதையெல்லாம் மனதில் எடுத்துக்கொள்ளாமல் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார். சரியான விமர்சனங்கள் வரும்போது அமைதியான வழியில் தன் நிலைப்பாட்டை விளக்கியிருந்தாலும், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது மனநிலையை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
சமந்தா தனது ட்வீட்டில், ‘என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். கருணைக்கு ஒரு காலாவதி தேதி இருக்கலாம் #JustSaying” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகை யாரை குறிவைத்து ட்வீட் செய்தார் என நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.