தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்பி செய்த திட்டங்கள் என்ன? என்று அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- கடந்த தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற கனிமொழி, கடந்த ஐந்து வருடத்தில் இந்த தொகுதியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
மேலும் படிக்க: பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது… வெளியான புது கருத்துக்கணிப்பு ; பிரேமலதா சொன்ன தகவல்…!!
தற்போது மீண்டும் எதிர்க்கட்சி வேட்பாளர் போன்று, மீண்டும் நான் வெற்றி பெற்றால் இதை செய்வேன். அதை செய்வேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார்களா? கஞ்சா, மது ஒழித்தார்களா..? திமுக இந்த தேர்தலில் நீட் பத்தியோ, சிஏஏ குடியுரிமை பற்றியோ ஏன் பேசவில்லை.
மேலும் படிக்க: மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!
மேலும், தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுகவினர். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்தது போல், இந்த தேர்தலிலும் நாங்கள் ஜெயித்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருகிறோம்.
பெட்ரோல் 75 ரூபாய்க்கு தருகிறோம், டீசல் 65 ரூபாய்க்கு தருகிறோம் என பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது, என்றார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.