அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொள்ளாச்சியில் பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே கருத்து மோதல் இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுக தலைமையை கோபம் அடையச் செய்தது.
இதனையடுத்து, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பொள்ளாச்சியில் நகர பாஜக சார்பில் நகர தலைவர் பரமகுரு தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட பாஜகவினர், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவிப்பை கொண்டாடினர். இதன் ஒருபகுதியாக, பட்டாசுகளை வெடிக்க முயன்றனர். அப்போது, போலீசார் அனுமதி மறுத்ததால், பாஜகவினர் ஜெயக்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.