அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொள்ளாச்சியில் பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே கருத்து மோதல் இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுக தலைமையை கோபம் அடையச் செய்தது.
இதனையடுத்து, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பொள்ளாச்சியில் நகர பாஜக சார்பில் நகர தலைவர் பரமகுரு தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட பாஜகவினர், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவிப்பை கொண்டாடினர். இதன் ஒருபகுதியாக, பட்டாசுகளை வெடிக்க முயன்றனர். அப்போது, போலீசார் அனுமதி மறுத்ததால், பாஜகவினர் ஜெயக்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.