கல்பாக்கம் அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிமுக, திமுகவினர் தேசிய கீதத்தை அவமதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் அதிருப்தியடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு 122 மிதி வண்டிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பள்ளியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை அமைதிப்படுத்தும் விதமாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனையும், பொருட்படுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தேசிய கீதத்தை அவமதிப்பு செய்யும் விதமாக, இவர்கள் செய்த செயல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.