வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதிமுக தலைமைக்கு இரட்டை தலைமையை தவிர்த்து ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டது. மேலும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நகர மன்ற முன்னாள் தலைவர்க மாயா பாஸ்கர் மற்றும் அமுதா சிவப்பிரகாசம், தற்போதைய நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுரவாடா பகுதியை சேர்ந்த ஞானேஸ்வர ராவ் , அனுஷா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு…
கயாடு லோஹர் ஒரே ஒரு படத்தால் படு பேமஸாகி வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான டிராகன் படம் 100…
ஹாரிஸ் மாமா 90ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000களில் கோலிவுட்டின் இசை உலகில்…
ஐபிஎல் போட்டியில் நேற்று வெகு நாள் கழித்து சென்னை அணி வெற்றியை ருசிபார்த்தது. நேற்று சென்னை அணி லக்னோ அணியுடன்…
This website uses cookies.