அதிமுக எப்போதும் அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்று கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம், ஜிபி சிக்னல், மற்றும் சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!
வாகனப் பிரச்சாரம் மூலமாகவும், வீடு வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கேஆர் ஜெயராம் மற்றும் முன்னாள் அமைச்சர் செ ம. வேலுச்சாமி உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து, பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அதிமுக எப்பொழுதும் ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கக்கூடிய கட்சி. கடந்த கொரோனா காலங்களில் எந்தவித சாதி மத பாகுபாடு இன்றி அனைவருக்கும் வீடு வீடாக அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்தது அதிமுக மட்டுமே. மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு முழு மனித வளர்ச்சியை போன்று இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக உறுதுணையாக இருப்போம், எனக் கூறினார்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.