கோவை : கோவை மாநகராட்சி கலந்தாய்வு கூட்டத்தில் அதிமுகவு கவுன்சிலர் ஒருவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஆய்வுக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது, கோவை மாநகராட்சிக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேஜை இருக்கை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடத்தை கவனித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
This website uses cookies.