கோவை : மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில், கோவை மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மேயர் பதவியையும் தனதாக்கியது. கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மேயர் விடுதி பராமரிப்புக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ள கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் மாமன்ற கூட்டம் நடைபெறும் வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தரையில் அமர்ந்து, பதாகைகளை பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, கவுன்சிலர் பிரபாகரன் கூறியதாவது :- மேயர் இல்லம் புதுப்பிக்க 1 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும். சேர்மன் அலுவலகம் பணிக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி மக்கள் வரி பணத்தை விரயமாக செலவு செய்கின்றனர்.
மேலும், திமுக அரசு, இதுவரை கோவைக்கு மத்திய அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் மட்டுமே திட்டங்களை தொடங்கி வருகிறது. கோவை மாநகராட்சி வருவாயிலிருந்து மேம்பாட்டுக்கு நிதிகளை ஒதுக்குவதோ, செலவுகளை செய்வதோ இல்லை, என்று குற்றம்சாட்டினார்.
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
This website uses cookies.