மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அதிமுக கவுன்சிலரை திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் செங்குறிச்சி திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் அந்த ஏரியில் பள்ளம் ஏற்பட்டு, அங்கு குளிக்கச் செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அசம்பாவீதங்கள் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க: 1,359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை… கொல்லங்கோடு அம்மன் கோவிலில் குவிந்த தமிழக, கேரள பக்தர்கள்..!!!
எனவே, ஏரியில் மணல் அள்ளக்கூடாது என அந்த கிராம மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் அண்ணாமலை தொடர்ந்து மணல் எடுத்து வருகிறார். நேற்று ஏரியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்.
அப்போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் லாரியை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றதாக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஜெயக்குமார் காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஜெயக்குமார் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் கடத்தலைத் தடுக்க சென்ற முன்னாள் அதிமுக கவுன்சிலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.