மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அதிமுக கவுன்சிலரை திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் செங்குறிச்சி திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் அந்த ஏரியில் பள்ளம் ஏற்பட்டு, அங்கு குளிக்கச் செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அசம்பாவீதங்கள் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க: 1,359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை… கொல்லங்கோடு அம்மன் கோவிலில் குவிந்த தமிழக, கேரள பக்தர்கள்..!!!
எனவே, ஏரியில் மணல் அள்ளக்கூடாது என அந்த கிராம மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் அண்ணாமலை தொடர்ந்து மணல் எடுத்து வருகிறார். நேற்று ஏரியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்.
அப்போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் லாரியை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றதாக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஜெயக்குமார் காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஜெயக்குமார் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் கடத்தலைத் தடுக்க சென்ற முன்னாள் அதிமுக கவுன்சிலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.