திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷுக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி இருவருக்கும் கட்சியின் வளர்ச்சியில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது .
இந்த நிலையில் நேற்று இரவு தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷை திமுக நகர மன்ற உறுப்பினர் சித்ராவின் கணவர் கோவி.சக்தி , சேனா ரவி , துரை , மூவரும் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் தெரு அருகே அரிவாளால் தாக்குதல் நடத்தி உள்ளனர் .
தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் தப்பிய ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மன்னார்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து டி.எஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கிராஜ் தலைமையில் தனிபடை அமைத்து குற்றவாளிகளை தேடி சென்றபோது முதலில் கோவி. சக்தி மதுபோதையில் டி.எஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார் .
இதையும் படியுங்க: என்ன செஞ்சீங்கனு விழுப்புரத்துக்கு ஆய்வு செய்ய வரீங்க? உதயநிதிக்கு சி.வி சண்முகம் கேள்வி!
பின்னர் இன்று காலை கோவி.சக்தி , சேனா ரவி , துரை மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் . நேற்று இரவு சக்தி டிஎஸ்பியை தள்ளிய வீடியோ சமூகவலைத்தலைங்களில் வேகமாக பரவிவருகிறது .
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.