திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷுக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி இருவருக்கும் கட்சியின் வளர்ச்சியில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது .
இந்த நிலையில் நேற்று இரவு தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷை திமுக நகர மன்ற உறுப்பினர் சித்ராவின் கணவர் கோவி.சக்தி , சேனா ரவி , துரை , மூவரும் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் தெரு அருகே அரிவாளால் தாக்குதல் நடத்தி உள்ளனர் .
தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் தப்பிய ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மன்னார்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து டி.எஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கிராஜ் தலைமையில் தனிபடை அமைத்து குற்றவாளிகளை தேடி சென்றபோது முதலில் கோவி. சக்தி மதுபோதையில் டி.எஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார் .
இதையும் படியுங்க: என்ன செஞ்சீங்கனு விழுப்புரத்துக்கு ஆய்வு செய்ய வரீங்க? உதயநிதிக்கு சி.வி சண்முகம் கேள்வி!
பின்னர் இன்று காலை கோவி.சக்தி , சேனா ரவி , துரை மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் . நேற்று இரவு சக்தி டிஎஸ்பியை தள்ளிய வீடியோ சமூகவலைத்தலைங்களில் வேகமாக பரவிவருகிறது .
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
This website uses cookies.