மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவரை படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் ஊராட்சி துணைத் தலைவராக இருக்கும் வைதேகி கணவர் சுமன். இவர் கடந்த 02.10.23 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில், ஏழாவதாக கந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கூறி துணைத் தலைவரின் உறவினர்கள் மணலி புதுநகர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சாலையில் பாதிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட கணவருக்காக சாலையில் படுத்து புரண்டு போராட்டம் நடத்திய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அவர்களின் உறவினரால் இந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, அவர்களின் உறவுக்கார பெண் ஒருவர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொள்வதற்காக முற்பட்டபோது போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.