பொள்ளாச்சியில் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரப்பிய அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த அருண்குமார் என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த பொள்ளாச்சி ஜோதி நகரை பகுதி சேர்ந்த ஷனாவாஸ் என்பவர் பார்த்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் தமிழக முதலமைச்சரை மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுடத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
இந்தநிலையில், அதிமுக பிரமுகர் அருண்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை அதிமுக தேர்தல் பிரிவு செயலாளாரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அருண்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.