Categories: தமிழகம்

தகுதியே இல்லாத ஒப்பந்ததாரருக்கு அனுமதி.. காஞ்சிபுரம் மாநகராட்சியில் முறைகேடு ; அதிமுக வார்டு கவுன்சிலர்கள் தர்ணா…!!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, விசிக 2, சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8, தமிழ் மாநில காங்கிரஸ் 1, பிஜேபி 1, பாமக 2, சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, பாதாள சாக்கடை ,குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை.

அதுமட்டுமல்லாமல், திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைபட்சமான நிர்வாகத்தை கண்டித்தும், எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.


எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால்வரையில் எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும், மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன் குற்றம் சுமத்துகிறார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகள்

1.பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு ரூ.25.50 லட்சம் என ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரே வாரத்தில் அதை மற்றொருவருக்கு மாற்றி 25.60 லட்சம் ரூபாய் என அனுமதி வழங்கப்பட்டிருப்பதை காணும்போது, யாரோ தனிநபர் ஒருவர் லாபம் சம்பாதிக்க மாநகராட்சி துணை செல்வதாக தெரிகிறது.

  1. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் தலையீட்டின் பெயரில், அன்னை அஞ்சுகம் கட்டிடத்தை பழுது பார்ப்பதற்காக தகுதியே இல்லாத ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது .
  2. காஞ்சிபுரம் மாநகராட்சியில் போதுமான பணியாளர்களையும் , போதுமான வாகனங்களையும் நியமிக்க தவறியதால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
  3. கட்டிட அனுமதி பெற லஞ்சம் பெரும் அதிகாரிகள் அதிகரித்து வருகின்றனர்.

5.மாநகராட்சி பொறியாளர் கணேசன் பெருமளவில் முறைகேடு செய்து வருகின்றார்.

  1. எதிர்க்கட்சி வார்டுகளுக்கு மட்டும் இதுவரையிலும் டெண்டர் விடாமல் காலம் தாமதம் செய்யப்படுகிறது.
    7.பணி மாறுதலில் செல்லும் அதிகாரிகளுக்கு மாற்றாக புதிய அதிகாரிகள் நியமிக்காததால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை
  2. தகுதியற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதால் செய்கின்ற பணிகளும் தரமற்ற முறையில் உள்ளது,
    மேற்கண்ட குற்றசாட்டுகளை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகராட்சி பரபரப்பாக காணப்படுகின்றது.
Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…

35 minutes ago

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

51 minutes ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

1 hour ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

2 hours ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

3 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

3 hours ago

This website uses cookies.