காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, விசிக 2, சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8, தமிழ் மாநில காங்கிரஸ் 1, பிஜேபி 1, பாமக 2, சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, பாதாள சாக்கடை ,குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை.
அதுமட்டுமல்லாமல், திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைபட்சமான நிர்வாகத்தை கண்டித்தும், எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால்வரையில் எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும், மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன் குற்றம் சுமத்துகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகள்
1.பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு ரூ.25.50 லட்சம் என ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரே வாரத்தில் அதை மற்றொருவருக்கு மாற்றி 25.60 லட்சம் ரூபாய் என அனுமதி வழங்கப்பட்டிருப்பதை காணும்போது, யாரோ தனிநபர் ஒருவர் லாபம் சம்பாதிக்க மாநகராட்சி துணை செல்வதாக தெரிகிறது.
5.மாநகராட்சி பொறியாளர் கணேசன் பெருமளவில் முறைகேடு செய்து வருகின்றார்.
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
This website uses cookies.