ஒபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், அதிமுக கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என கோர்ட் தடை விதித்துள்ளது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பினரில் சிலர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது எடப்பாடி தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்து, திருப்புவனம் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
போஸ்டரில், ‘அதிமுக கொடி, சின்னத்தை பயன்ப டுத்தும் ஓபிஎஸ் தரப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும்’ என எழுதப்பட்டிருந்தது. இது அப்பகுதி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.