Categories: தமிழகம்

சொத்துக்காக வளர்ப்பு தாய், தந்தை எரித்துக் கொலை : மகள், மருமகன் செய்த கொடூர செயல்… நீதிமன்ற தீர்ப்புக்கு குவியும் வரவேற்பு!!

புதுச்சேரி : சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தர்மபுரி அகத்தியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 74) இவரது மனைவி வசந்தா(வயது 60). அவர்களுக்கு குழந்தை இல்லாததால் வசந்தாவின் தங்கை மகளான ஆனந்தியை (வயது 36) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர்.

மேலும் வளர்ப்பு மகளான ஆனந்திக்கு திருமணம் ஆன நிலையில் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேல் (வயது 37) ஆகியோர் நாராயணசாமி வீட்டிலேயே இருந்தனர். நாராயணசாமி வசந்தா தம்பதியினர் புதிதாக வீடு ஒன்றை கட்டினர். அந்த வீட்டை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு ஆனந்தி மற்றும் முருகவேல் வற்புறுத்தி வந்தனர்.

இதற்கு நாராயணசாமி வசந்தா தம்பதி சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18.9.2012 அன்று நாராயணசாமி மற்றும் வசந்தா இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டனர்.

வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த ஆனந்தி மீது மண்ணெண்ணெய் இருந்தது. இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீசார் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேளை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தி மற்றும் முருகவேலுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!

சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…

3 hours ago

ராஜமௌலி தொடர் டார்ச்சர்…திருமணமே ஆகல…பிரபலம் தற்கொலை முடிவு.!

நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…

4 hours ago

கருவைக் கலைத்துவிடு.. காசு தாரோம்.. ஜிம் ஓனரின் தாய் டீல்.. பெண் விபரீத முடிவு!

தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…

5 hours ago

‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…

5 hours ago

பங்கேற்க முடியாது.. போலீசார் மீதே நடவடிக்கை? – அண்ணாமலை முக்கிய முடிவு!

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…

6 hours ago

குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!

நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…

6 hours ago

This website uses cookies.