Categories: தமிழகம்

சொத்துக்காக வளர்ப்பு தாய், தந்தை எரித்துக் கொலை : மகள், மருமகன் செய்த கொடூர செயல்… நீதிமன்ற தீர்ப்புக்கு குவியும் வரவேற்பு!!

புதுச்சேரி : சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தர்மபுரி அகத்தியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 74) இவரது மனைவி வசந்தா(வயது 60). அவர்களுக்கு குழந்தை இல்லாததால் வசந்தாவின் தங்கை மகளான ஆனந்தியை (வயது 36) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர்.

மேலும் வளர்ப்பு மகளான ஆனந்திக்கு திருமணம் ஆன நிலையில் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேல் (வயது 37) ஆகியோர் நாராயணசாமி வீட்டிலேயே இருந்தனர். நாராயணசாமி வசந்தா தம்பதியினர் புதிதாக வீடு ஒன்றை கட்டினர். அந்த வீட்டை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு ஆனந்தி மற்றும் முருகவேல் வற்புறுத்தி வந்தனர்.

இதற்கு நாராயணசாமி வசந்தா தம்பதி சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18.9.2012 அன்று நாராயணசாமி மற்றும் வசந்தா இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டனர்.

வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த ஆனந்தி மீது மண்ணெண்ணெய் இருந்தது. இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீசார் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேளை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தி மற்றும் முருகவேலுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

9 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

9 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

10 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

11 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

12 hours ago

This website uses cookies.