தமிழகம்

வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்.. ஜூட் விட்ட ஐ.பெரியசாமி.. திண்டுக்கல்லில் பதற்றம்!

திண்டுக்கல்லில், மனு அளிக்கச் சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கையிலெடுத்துள்ளனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் உதயகுமார். வழக்கறிஞரான இவர், திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து, மாலை தனது குழந்தையை அழைத்து வரச் சென்றுள்ளார். அப்போது, கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடப்பதால் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோரின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக் கோரி, திமுக கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்திக்க வழக்கறிஞர் உதயகுமார் சென்றுள்ளார். அப்போது, உதயகுமாரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீசார், இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் எனக் கூறி திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.

ஆனால், அமைச்சரைs சந்தித்து புகார் அளித்துவிட்டு தான் செல்வேன் எனக் கூறிய வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதனைத் தடுத்ததில் பாதுகாப்பு போலீசாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், போலீசார் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்.

பின்னர், இது குறித்து சக வழக்கறிஞர்களுக்கு உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி, பிற வழக்கறிஞர்கள் வந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் ஆக ஆக வழக்கறிஞர்கள் அதிகமாக வரத் தொடங்கினர். இதனால், வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதைக் கண்ட வழக்கறிஞர்கள், திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு பயந்து வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை.. ஸ்கூட்டரால் சிக்கிய கணவர்!

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஏடிஸ்பி தெய்வம், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு எஸ்எஸ்ஐ, போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறி, இரவு 7.45 மணி வரை வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல்லில் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.