தமிழகம்

வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்.. ஜூட் விட்ட ஐ.பெரியசாமி.. திண்டுக்கல்லில் பதற்றம்!

திண்டுக்கல்லில், மனு அளிக்கச் சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கையிலெடுத்துள்ளனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் உதயகுமார். வழக்கறிஞரான இவர், திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து, மாலை தனது குழந்தையை அழைத்து வரச் சென்றுள்ளார். அப்போது, கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடப்பதால் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோரின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக் கோரி, திமுக கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்திக்க வழக்கறிஞர் உதயகுமார் சென்றுள்ளார். அப்போது, உதயகுமாரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீசார், இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் எனக் கூறி திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.

ஆனால், அமைச்சரைs சந்தித்து புகார் அளித்துவிட்டு தான் செல்வேன் எனக் கூறிய வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதனைத் தடுத்ததில் பாதுகாப்பு போலீசாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், போலீசார் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்.

பின்னர், இது குறித்து சக வழக்கறிஞர்களுக்கு உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி, பிற வழக்கறிஞர்கள் வந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் ஆக ஆக வழக்கறிஞர்கள் அதிகமாக வரத் தொடங்கினர். இதனால், வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதைக் கண்ட வழக்கறிஞர்கள், திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு பயந்து வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை.. ஸ்கூட்டரால் சிக்கிய கணவர்!

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஏடிஸ்பி தெய்வம், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு எஸ்எஸ்ஐ, போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறி, இரவு 7.45 மணி வரை வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல்லில் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

5 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

5 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

6 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

7 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

7 hours ago

This website uses cookies.