Categories: தமிழகம்

அண்ணாமலைக்கு ரொம்ப பயம்.. அதனாலதான் இலங்கைக்கு ஓடிவிட்டார் : காங்கிரஸ் எம்பி தாக்கு!!

விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட M. செவல்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ 7,50,000 மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர்அவர்கள், மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் பொதுமக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட் ஆகவும் மேலும் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அதானிக்கான பட்ஜெட் ஆக இருக்கிறது என்றும், இந்த பட்ஜெட் 100 நாள் வேலை வாய்ப்பை நம்பி இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய பட்ஜெட் ஆக இருக்கிறது.

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஏறக்குறைய 9000 கோடி நிதியை குறைத்திருக்கின்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஏழை எளிய மற்றும் உழைப்பவர்களின் வலியைப் பற்றி சிந்தனை இல்லாத பட்ஜெட் ஆக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களுடைய கடும் உழைப்பை அதானி அவர்களை 609வது இடத்திலிருது உலகத்தினுடைய இரண்டாவது பணக்காரராக முன்னேற்றுவதற்கு உழைத்து இருக்கிறார்கள் என்றும் அனைத்து துறைகளிலும் அதானினுடைய நலனுக்காக செயல்பட அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது என்றும்,

ராகுல் காந்தி அவர்களை உள்ளத்தாலும் உணர்வாளும் மோடி அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுவிட்டது என்றும் ஆனால் இந்தியாவில் வாழ்க் கூடிய ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்றும், மேலும் அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய சட்டப்பூர்வமான உரிமைகளை மத்தியில் ஆளும் மோடி அரசு மறுக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் தலைவர் அண்ணாமலை அவர்கள் போட்டியிட பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ள அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுவை சசிகலா அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என நான்கு கூறுகளாக்கிய பங்கு பாஜகவை சாரும் என்றும் மாணிக்கம் தாகூர் பேட்டியின் போது தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

10 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

11 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

12 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

12 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

13 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

13 hours ago

This website uses cookies.