திருமணமாகி 9 மாதத்தில்.. நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் தர்ணா : வேடிக்கை பார்த்த காவல்துறை!
வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது,
இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து கணவன் மனைவியிடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது மேலும் இவரது கணவர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் கொலை மிரட்டல் கூறப்படுகிறது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திடீரென பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அழைத்துச் செல்ல கூட போலீசார் காவல் நிலையத்தை விட்டு வெளியே வரவில்லை.
மேலும் படிக்க: திமுவினரின் செல்போன்களை ஒட்டு கேட்கும் மத்திய அரசு? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!
இந்த நிலையில் அவரது உறவினர் பெண் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரியதர்ஷினியை சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்
இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர், வேலூரில் முக்கிய பகுதியான வேலூர் அண்ணா சாலையில் காவல் நிலையம் எதிரில் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.