கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள காலனி தெரு,கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டு முன் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூர் மாவட்டம் அகரத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த அபிநயா ஜோதி(19) என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.
பின்னர் அது காதலாகி இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டு முன் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இருவரும் அபிநயா ஜோதி சொந்த ஊரான அகரத்த நல்லூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பெண்ணின் தாயார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலம்பரசனை எச்சரித்து அவரது சொந்த ஊரான கீழ் புளியம்பட்டு கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து சிலம்பரசன் காட்டுமன்னார்கோவில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். இதனைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் உள்ள எலக்ட்ரிக் கடையில் சொற்ப வருமானத்தில் வேலை செய்து வந்தார்.
இதில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் இருவருக்கும் தினந்தோறும்
சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் அபிநயா ஜோதி போன் பேசினால் அவர் மீது சந்தேகப்பட்டு சிலம்பரசன் அவரை அடித்து ,திட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு சிலம்பரசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்பொழுது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது சிலம்பரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவி அபிநயா ஜோடியை பலமாக தலையில் தாக்கியுள்ளார்.
அபிநயா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மயக்கம் ஆனார் . இதனை கண்ட சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அபிநயா ஜோதியை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா ஜோதி உயிரிழந்தார்.
இதனை அடுத்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
This website uses cookies.