கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள காலனி தெரு,கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டு முன் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூர் மாவட்டம் அகரத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த அபிநயா ஜோதி(19) என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.
பின்னர் அது காதலாகி இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டு முன் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இருவரும் அபிநயா ஜோதி சொந்த ஊரான அகரத்த நல்லூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பெண்ணின் தாயார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலம்பரசனை எச்சரித்து அவரது சொந்த ஊரான கீழ் புளியம்பட்டு கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து சிலம்பரசன் காட்டுமன்னார்கோவில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். இதனைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் உள்ள எலக்ட்ரிக் கடையில் சொற்ப வருமானத்தில் வேலை செய்து வந்தார்.
இதில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் இருவருக்கும் தினந்தோறும்
சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் அபிநயா ஜோதி போன் பேசினால் அவர் மீது சந்தேகப்பட்டு சிலம்பரசன் அவரை அடித்து ,திட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு சிலம்பரசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்பொழுது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது சிலம்பரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவி அபிநயா ஜோடியை பலமாக தலையில் தாக்கியுள்ளார்.
அபிநயா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மயக்கம் ஆனார் . இதனை கண்ட சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அபிநயா ஜோதியை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா ஜோதி உயிரிழந்தார்.
இதனை அடுத்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.