ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் கீழ தெருவை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் பாலன் (வயது 30) இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஆன்லைன் சீட்டு விளையாடு பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியில் விளையாடி சுமார் 3 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தந்தை வங்கிகடன் செலுத்துவதற்காக கொடுத்த ரூபாய் 50,000 பணத்தையும் வைத்து பாலன் இன்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த பாலன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.