Categories: தமிழகம்

மீண்டும் மயிலாடுதுறைக்கு U-TURN… வனத்துறைக்கு போக்கு காட்டிய சிறுத்தை ; நள்ளிரவில் இளைஞர்களுக்கு ஷாக்..!!

வனத்துறையினர் சிறுத்தையை தஞ்சை மாவட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை, காவிரி, பழங்காவிரி, மஞ்சள் ஆறு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது.

மேலும் படிக்க: ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

இதனை பிடிக்க கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சி வாய் பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்தது. நேற்று சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் நண்டல ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் பொருத்தப்பட்டிருந்த கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை காஞ்சி வாய், கருப்பூர், பேராவூர் ஆகிய பகுதிகளில் நண்டலாறு மற்றும் மஞ்சுளா ஆற்றின் கரை பகுதியில் அமைத்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், இன்று கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில், கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் உருவம் பதிவாகாத நிலையில், தேடுதல் வேட்டையின் அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தின் நண்டலார் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ரூ.3000 கோடியில் படேல் சிலை… வெள்ள நிவாரண நிதியை வழங்க தயக்கம் ஏன்..? பாஜகவுக்கு அமைச்சர் எ.வ. வேலு கேள்வி

சிறுத்தை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் நண்டலாறு வீரசோழன் ஆற்று பகுதிகளில் இருக்கலாம் என்று வனத்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை அடுத்த புறநகர் பகுதியான அடியமங்கலம் ரயில்வே லைனில், செயல்படும் ஜல்லி கலவை தயார் செய்யும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வேலை செய்யும் இளைஞர்கள், சாப்பிட்டுவிட்டு அமர்ந்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரத்தில் உட்கார்ந்து இருந்த சிறுத்தை, மரக்கிளை முறிந்து தாவி குதித்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் நுழைந்ததை பார்த்துள்ளனர்.

தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, இரவில் படம்பிடிக்கும் தெர்மல் ட்ரோன் மூலமாக அப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இடத்தில் சிறுத்தையின் கால் தடம் போன்று பதிவுகள் காணப்படும் நிலையில், காலையில் மீண்டும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் வனத்துறை ஈடுபட உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை விட்டு சிறுத்தை சென்று விட்டதாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் யு டர்ன் அடித்து மயிலாடுதுறைக்கு சிறுத்தை திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.