விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் விக்கிரவாண்டி சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இன்று(10-06-24) இந்திய தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை மாதம் 10ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே இருந்த கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டு மறைக்கப்பட்டன. இதே போன்று கட்சி கொடி கம்பங்களில் இருந்த கட்சி கொடிகளும் அகற்றப்பட்டன.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.