திருப்பூர் : செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் தொடர்ந்து தன் மீது வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவர் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார் . கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திருப்பூரில் தங்கி இருக்கும் இவர் மீது நண்பரின் வீட்டில் இருந்து சிலிண்டர் திருடி வந்ததாக மங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் வெவ்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நான்கு மாதம் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளதாகவும் , 6 வழக்குகளிலும் தான் சம்பந்தப்படாத நிலையில் தொடர்ந்து தன் மீது வழக்குகள் பதிவு செய்ய காவல்துறை முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயற்சித்தார்.
மூன்று பேரும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்ட நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் . இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.