அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால், தங்கள் கருத்துகளைக் கேட்க வேண்டும் என அதிமுக, பாஜக தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது வேறொரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இதனிடையே, தாமாக வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது. மேலும், தேசிய மகளிர் ஆணையமும் சென்னையில் முகாமிட்டு, விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, அதிமுகவின் இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேவியட் மனுவில், “ஏற்கனவே இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் SIT விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஒருவேளை தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: எதிர்நீச்சல் 2-வில் இவரா…லீக்கான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்..!
அதேநேரம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தங்களது கருத்தினை கேட்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.