சென்னை: சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது.முதல் நாளான இன்று நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொத்து வரி கடுமையாக மக்களை பாதிக்கிறது. மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அதோடு அமைச்சர் மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதனால் தான் நாங்கள் உயர்த்திருக்கிறோம் என்கிறார். மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று சொல்லவில்லை. நகர்ப்புற தேர்தல் முடிவடைந்த பிறகு சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள். மக்களுக்கு பரிசு வழங்கியுள்ளது.
மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சியில் உள்ள மக்கள் இந்த சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வாடகை வீட்டில் வசிக்க கூடிய மக்களும் அதிகம் பாதிக்கபட்டிருக்கிறது.இதனால் வாடகை கட்டணம் உயரும் என்றும் கூறினார். மேலும் சொத்து வரியை உயர்த்தியதை கண்டிப்பதாக தெரிவித்தார்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.