அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு : பரிவட்டம் கட்டி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

Author: kavin kumar
10 February 2022, 4:53 pm

திருச்சி : திருச்சியில் தீவிர வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு கோவிலில் பரிவட்டம் கட்டி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி 20வது வார்டுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் வேட்பாளர் வெல்லமண்டி ஜவஹருக்கு பெரிய கடை வீதி,

நரசிம்மலு நாயுடு தெருவில் உள்ள கண்திறந்த ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அவருக்கு தேர்தல் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து வேட்பாளர் ஜவஹர் பேகம் பள்ளிவாசல் தெரு, பெரிய கடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu