கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் கட்சி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்த பின் பிரச்சாரத்தை துவக்கினார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் கோவை மாநகராட்சி 38வது வார்டில் அதிமுக சார்பில் டாக்டர்.ஷர்மிளா சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில், அவர் நேற்று பூமார்க்கெட் அருகே உள்ள மாநகராட்சி மேற்குமண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் போட்டியிடும் 38வது வார்டுக்கு உட்பட்ட ஓனாம்பாளையம் பகுதியில் உள்ளா விநாயகர் கோவில், கருப்பராயன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை வீடு வீடாக மக்களுக்கு அளித்து வாக்குகளை சேகரித்தார். அவருடன் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
This website uses cookies.