அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்… 2 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மேயர் உத்தரவு!!
கோவை மாநகராட்சி 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்து அடுத்த இரண்டு மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது கோவை மாநகராட்சியில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததை ரத்து செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் மற்றும் சர்மிளா ஆகியோர் பதாகைகளுடன் மாமன்ற கூட்டம் நடக்கும் விக்டோரியா ஹாலுக்குள் சென்று வலியுறுத்தினர்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மூவரையும் வெளியேறுமாறு மேயர் கூறியதை அடுத்து மூவரும் விக்டோரியா ஹாலிக்கு வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்தும் அடுத்த இரண்டு கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தும் மேயர் கல்பனா தற்பொழுது உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.