திருப்பூர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் தலையில் துண்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மன்றக் கூட்டம் இன்று (நவ.28), மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், தீர்மானங்களை வாசித்தார். அப்போது, அதிமுக கவுன்சிலர்கள் குறுக்கிட்டனர்.
தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றிற்கு எதிராக கேள்வி எழுப்பினர். அது மட்டுமல்லாமல், கறுப்பு உடையில் வந்த அதிமுக கவுன்சிலர்கள், மன்றத்தில் அமர்ந்து தலையில் துண்டை முக்காடு போல் அணிந்து கொண்டு உயர்த்தப்பட்டப் வரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதனை ஒரு பொருட்டாக ஏற்றுக் கொள்ளாத மேயர் தினேஷ்குமார், தீர்மானங்களை முழுவதுமாகக் கூட வாசிக்காமல், தீர்மான எண்களை மட்டும் சொல்லிவிட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அது மட்டுமின்றி, கூட்டம் நிறைவுற்றதாகவும் கூறிவிட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, மன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கவுன்சிலர்களையும் கைது செய்து, வேனில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக, இன்று திருப்பூர் சாதாரண மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்பதே தெரியாத சூழல் உருவாகி உள்ளது.
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
This website uses cookies.