விழுப்புரம் : அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் படம் மற்றும் அவரது பெயர் அழிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று செய்யப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு, நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் அனுமதி பெறாததால், பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும், அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சி பதாகைகள் மற்றும் அப்பகுதியில் சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் மற்றும் அவரது பெயரை, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெள்ளையடித்து, இன்று அழித்தனர்.
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்த நேற்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு கொடுத்துள்ள நிலையில், விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் மற்றும் அவரது பெயரை அழித்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை நிலைய செயலாளராக இபிஎஸ் செயல்டுபவார் என்றும், ஓபிஎஸ் பொருளாளர் மட்டுமே என சிவி சண்முகம் இன்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.