விழுப்புரம் : அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் படம் மற்றும் அவரது பெயர் அழிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று செய்யப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு, நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் அனுமதி பெறாததால், பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும், அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சி பதாகைகள் மற்றும் அப்பகுதியில் சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் மற்றும் அவரது பெயரை, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெள்ளையடித்து, இன்று அழித்தனர்.
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்த நேற்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு கொடுத்துள்ள நிலையில், விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் மற்றும் அவரது பெயரை அழித்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை நிலைய செயலாளராக இபிஎஸ் செயல்டுபவார் என்றும், ஓபிஎஸ் பொருளாளர் மட்டுமே என சிவி சண்முகம் இன்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.