Categories: தமிழகம்

தேர்தலில் திமுக பெற்றது கொள்முதல் வெற்றி : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்!!

திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது கொள்முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொய் பேசுவதற்கு திமுகவினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் எனவும் எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி.

அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்ட தொண்டர்கள் வரை பொய் வழக்குகள் போட்டு பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரைடு என்ற பெயரில் ஏவிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கு என்று வழக்கு மட்டுமே போடப்படுகிறது. நுணுக்கமாக கவனிக்கப்பட வேண்டும் முறைகேடு என்று வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ஆட்சியின் நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக தவறு செய்திருந்தால் அதை எதுவுமே அவர்களால் சொல்ல முடியவில்லை நிரூபிக்கவும் முடியவில்லை சொத்துக்குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறப்படுகிறார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் நாங்கள்தான் கொண்டு வந்தோம் காவிரி குடிநீர் திட்டம் முதல் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து விஷயங்களையும் பொய் சொல்லி வருகிறார்கள்.

தனக்கு அதிகாரமே இல்லாத ஒரு பிரச்சனையில் மத்திய அரசாங்கமே முடிவெடுக்கும் ஒரு பிரச்சனையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் அனைத்து பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள்.

வெட்கம் இல்லாமல் ரோசம் இல்லாமல் மானம் மரியாதை இல்லாமல் இது எல்லாம் சொன்னதைச் செய்யாமல் ஏமாற்றி விட்டோமே என்ற செய்வதற்கு உண்டான வழிகளைத் தேடாமல் அமைச்சர்கள் முதல் அடி தொண்டை வரை பொய் வழக்கு போட்டு வருகிறார்கள்.

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொள்முதல் செய்து வெற்றிபெற்றுள்ள ஆட்சி என ஆவேசமாக பேசினார் இதில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்ட அதிமுகவின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஒன்றியம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

13 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

18 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

1 hour ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

2 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

This website uses cookies.