Categories: தமிழகம்

அதிமுக நிர்வாகி திடீர் கைது… பொள்ளாச்சி டூ வேலூர் : நடந்தது என்ன? பரபரக்கும் பின்னணி!!

அதிமுக நிர்வாகி திடீர் கைது… பொள்ளாச்சி டூ வேலூர் : நடந்தது என்ன? பரபரக்கும் பின்னணி!!

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த 29.03.2023 அன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும் என்று உருக்கமாகப் பேசினார்.

அமைச்சர் துரைமுருகன் பேசிய இந்த வார்த்தைகளை அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியான பொள்ளாச்சி அருண்குமார் என்பவர், துரைமுருகன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவு வைரலான நிலையில், காட்பாடி திமுக வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காட்பாடி காவல் துறையினர், அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை பொள்ளாச்சியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக பொள்ளாச்சி அதிமுக ஐ.டி விங் நிர்வாகி அருண்குமார் கைது செய்து காட்பாடி காவல் நிலையம் அழைத்து வருவதை அறிந்த வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆளும்கட்சியை எதிர்த்து கருத்து கூறுபவர்களை ஒடுக்குவதற்காக பொய்வழக்குகளை போட்டு கைது செய்வது தொடர்கதையாக உள்ளது.

இதே நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட போது, சம்மபந்தப்பட்ட கட்சியினர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்கூடு என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

8 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

9 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

10 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

10 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

11 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

11 hours ago

This website uses cookies.