இபிஎஸ் வசம் அதிமுக.. மீண்டும் உறுதி செய்த நீதிமன்றம் : இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!
ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.