அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு மதுரை வளர்ச்சி அடைந்து உள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை வைகை நதி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் வைகை நதி ஆரத்தி வழிபாடு பூஜை சிம்மக்கல் கல்பால மத்தியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தனது மனைவியுடன் கலந்து கொண்டு வைகை நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி எடுக்கும்போது சுவாமியை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை மனைவியுடன் இணைந்து சந்தித்தார்
வைகை ராஜன், பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் 2019 முதல் இந்த விழா நடைபெறுகிறது.
கடந்த 2019 முன்பு வைகை நதி வறண்டு கிடந்தது. தண்ணீர் எடுக்க 16 கீழ் தோண்டியும் நீர் கிடைக்காமல் நீரை எடுத்து வந்து இந்த விழாவை நடத்தினோம் அந்த விழாவிற்கு பிறகு தொடர்ந்து வைகை நதி பாய்ந்து ஓடுகிறது.
40 ஆண்டுகள் நிறையாத மாரியம்மன் தெப்பக்குளம் தற்போது ஓர் ஆண்டுக்கு மேலாக நீர் தேங்கி எழில்மிகு காட்சி அளிக்கிறது. மதுரை ஓர் ஆன்மிக நகரம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
வைகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க இரு பக்கம் 11 கிலோ மீட்டர் விரைவு சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு அது ஒருபகுதி நிறைவடைந்தது, இதனால் நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. மற்றொரு பக்கம் இன்னமும் பணிகள் முடியவில்லை திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறது என எனது மன வருத்தத்தை மதுரை மக்கள் சார்பில் தெரிவிக்கிறேன்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு மதுரை வளர்ச்சி அடைந்து உள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரைக்கு நீர் கொண்டுவரும் திட்டம் விரைவில் முடியுமா என நான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார் என கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.