சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மர்ம நபர்கள் அரிவாளில் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.
இதையறிந்த அவரது குடும்பத்தினர் உட்பட அ.தி.மு.க.,வினர் அங்கு குவிந்தனர். மேலும், தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? கொலைக்கான காரணம் அரசியல்? , தொழில் போட்டி? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட சண்முகம், கடந்த 2011 முதல் 2016 வரை, சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் பதவி வகித்தார்.
மேலும், இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியிலேயே அதிமுக நிர்வாகி சண்முகத்தை, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்.
உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் நீண்ட நேரம் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இவர், அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.