Categories: தமிழகம்

தொகுதியில் உள்ள 10 பிரச்சனைகளை பட்டியலிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் : அடுக்கடுக்கான புகார்களுடன் ஆட்சியரிடம் மனு!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது தொகுதியில் நீண்டகாலமாக உள்ள முக்கியமான 10 பிரச்சினைகள் அல்லது குறைகளை மாவட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

9 பேரும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அளித்து மாவட்ட ஆட்சியரிடன் அப்பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி அரசாங்கம், சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கடிதம் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்த கோரிக்கையில் அதிகமாக முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசியமான கோரிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். திமுக அரசு வந்து ஒன்றரை வருடமாகிறது என தெரிவித்த அவர், முந்தைய ஆட்சியில் சாலைகள் அனைத்தும் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும் எனவும் தற்போது சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலாவதாக அளித்துள்ளதாக கூறினார். மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக, பைப் லைன் தோண்டிய சாலைகள் அனைத்தும் மழை வருவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே இந்த அரசு முதலில் சாலைகளை சரி செய்ய வேண்டுமென கூறினார்.

ஜெயலலிதா காலத்தில் ஒப்பந்தம் கோரிய 500 சாலைகளை இந்த அரசாங்கம் ரத்து செய்ததாகவும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாலங்கள் முடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் கோரிக்கையாக அளித்ததாக தெரிவித்தார். தற்போது குடிநீர் விநியோகம் செய்ய 10,15 நாட்கள் ஆவதாகவும் கூறினார். அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை என தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் எனவே அந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு நிறைவேற்ற வேண்டுமென கூறினார். கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டுமென கூறினார்.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50% நிறைவடைந்த பணிகளை ஏதோ உள் நோக்கத்தோடு நிறுத்தி விட்டதாகவும் அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளதாகவும், அதனால் சிட்டிக்குள் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும் என தெரிவித்தார். ஊழல் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக திமுக எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

41 minutes ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

2 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

2 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

3 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.