ஆ.ராசாவை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் கிராம மக்கள் மற்றும் பா.ஜ.க வினர் ஒன்றிணைந்து அவரது இந்து விரோத பேச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் சார்ந்து பேசும்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் அவர் பேசிய பேச்சு தற்போது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் பா.ஜ.க மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கண்டன போராட்டம் நடந்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர், பாஜகவினர், பல்வேறு சமூகத்தினர் ஆர்.ராசாவின் இந்து விரோத பேச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்”திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது மேலும் ஆ. ராசாவின் இந்த பேச்சானது கண்டனத்துக்குரியது.
அவர் கைது செய்யப்பட வேண்டும் மேலும் அவரை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் ஜெசிம், தென் தாமரை குளம் பேரூர் கழகச் செயலாளர் தாமரை தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
This website uses cookies.