தேனி : பெரியகுளத்தில் எடப்பாடி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிக உயரிய பதவியாக கருதப்பட்டது. குறிப்பாக முதல்வராகவும் பொதுச்செயலாளரும் எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா இருந்தார்.
அதன் பின் கட்சியை வழிநடத்துபவர் யார் என்ற பிரச்சனை அதிமுகவில் ஏற்பட்டது. இதையடுத்து பொதுச்செயலாளர் பதவியை நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அந்த பதவியில் பொறுப்பேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்மா நல்லாசியுடன் விரைவில் அஇஅதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன் என பெரியகுளம் சுரேஷ் என்பவர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் முன்னாள் முதல்வர் ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரில் அதிமுகவின் எடப்பாடி கே பழனிச்சாமி பொதுச் செயலாளராக போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரியகுளம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.