மது, கஞ்சா.. போதை கும்பலை எச்சரித்த இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு பைக் ஏற்றி கொலை : போதையில் வெறிச்செயல்!
கிருஷ்ணகிரி அருகே தின்னகழனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரது வீட்டின் அருகே நேற்று நள்ளிரவு சுமார் 20 வயது உடைய மர்ம நபர்கள் ஒரு கார் இரண்டு இரு சக்கர வாகனங்களுடன் கஞ்சா மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது சின்னத்தம்பி அவர்களிடம் சென்று யார் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் எதற்காக வந்தீர்கள் இங்கிருந்து செல்லுங்கள் அதிகளவில் ஆடு மாடு திருடு போகிறது இங்கு இருக்கக் கூடாது என சொன்னதாக கூறப்படுகிறது.
இதில் மது போதையிலிருந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் சின்னத்தம்பியின் மகன் வெற்றி சத்தம் கேட்டு வந்துள்ளார் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும் சின்னத்தம்பி வெற்றியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் கஞ்சா மது போதையில் இருந்த இளைஞர்கள் சென்று உள்ளனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் மீண்டும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் உருட்டு கட்டை பாட்டிலுடன் வந்த மர்ம நபர்கள் சின்னத்தம்பி வீட்டில் சண்டை போட்டுள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு வெற்றியின் நண்பர் கார்த்திக் என்பவர் போன் செய்துள்ளார். அவரிடம் பேசிய வெற்றி எங்களை தாக்கி விட்டு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர் அவர்களை மடக்கி பிடிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கார்த்திக் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். கார்த்திக் வருவதை கவனித்த அவரது தந்தை தேவராஜ் பின் தொடர்ந்து வந்துள்ளார்.
அப்போது கஞ்சா மது போதையில் வந்த மர்ம நபர்கள் கார்த்திக் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றினர் இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் கார்த்திக் உயிரிழந்தார்.
மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கார்த்திக் தந்தை தேவராஜ் மீது தாக்கினர் இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். இதை எடுத்து மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தகவல் அறிந்து விரைந்து சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உயிரிழந்த கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
காயமடைந்த தேவராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மது போதையில் இருந்த நபர்கள் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.