கோவை : கோவையில் ஜமாத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக இந்து முன்னணியினர் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்
இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது : வரும் 1ம் தேதி அனைத்து ஜமாத் இணைந்து கோவையில் போராட்டம் நடத்தி அதன் வாயிலாக கலவரம் நடத்த முயற்சி நடைபெறுகிறது. அதற்காக பொறுப்பு காவல் ஆணையராக உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.
கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமல் உள்ளனர். காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளை முற்றுகையிட முயற்சித்து செய்கின்றனர்.
அதனால் தான் காவல்துறை அதிகாரிக்ளிடம் மனு அளித்துள்ளோம். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் குரானை கொடுக்கின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய நபர்களை உளவுத்துறையை வைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.