Categories: தமிழகம்

வழிப்பறி கொள்ளையனுக எல்லாம் எங்க ஊர்ல தான் இருக்காங்க : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!!

வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் மற்றும் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் மற்றும் 8 லட்சம் மதிப்பில் நியாய விலை கடைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் காரணமாக அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்கள் தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

காட்பாடியில் 200 படுக்கையில் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு துவக்கப்படும். காட்பாடியில் கூடுதலாக ரயில்வே அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்பாடியில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக காவல் நிலையம் போன்ற அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும்
இதன் மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்

இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காட்பாடி வடக்கு பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன் துணைத்தலைவர் சரவணன் திமுக பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.கமல்ராஜ், 5-வது வட்டச் செயலாளர் விநாயகம் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, டீட்டா சரவணன், சித்ரா மகேந்திரன், சித்ரா லோகநாதன், விமலா சீனிவாசன், லோகநாதன், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட பலர் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

13 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

16 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

42 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.