விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விழுப்புரம் நகர பகுதிகளில் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் பணிகளை டெண்டர் விட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவியை எதிர்த்து கூட்டணி கட்சியினர் வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட 17 பேர் கூட்ட அரங்கிற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நகர மன்ற கூட்டத்திற்கு வந்த நகர மன்ற தலைவியை நோக்கி கூட்டணி கவுன்சிலர்கள் சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சுரேஷ் ராம், நகர மன்ற தலைவியின் அருகே சென்று நகர மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூட்டணி கட்சி கவுன்சிலரே கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்று கூறிவிட்டு சென்று விட்டார். அப்போது 17 கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவிக்கு எதிராக எதிர்க்கட்சியினருடன் கூட்டணி கட்சியினரும் இணைந்துள்ளதால் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.