ராமநாதபுரம் : கீழக்கரை அருகே சமூக விருதுகளை பெற்ற இரட்டையர்களை கஞ்சா கடத்த விற்பனையில் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கீழக்கரை உதவி ஆய்வாளர் ஆறுமுகத்தரசன் தலைமையில் காஞ்சிரங்கடி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது காஞ்சிரங்குடி பேருந்து நிலையம் அருகே போலீசாரை கண்ட 4 பேர் கொண்ட கும்பல் ஓட முயற்சித்த போது, விரட்டி பிடித்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அதில் 2 கிலோ 200 கிராம் எடையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கீழக்கரையில் சில்லறை வியாபாரம் செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்து ஏர்வாடி தண்ணீர் பந்தல் முகம்மது. (வயது 19), கீழக்கரையை சேர்நத்து முகமது நசிருதின், அகமது அசாருதீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்ப்பட்ட முகமது நசிருதின், அகமது அசாருதீன் ஆகியோர் இரட்டை சகோதாரர்கள் என்பதும் , ஆம்புலன்ஸ் சேவை செய்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.